/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கார் விபத்தில் பெண் உயிரிழப்பு
/
கார் விபத்தில் பெண் உயிரிழப்பு
ADDED : டிச 28, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், ரெங்கா நகரை சேர்ந்தவர் பாரதி, 35. இவரது மனைவி கார்த்திகா, 28. இவர்களின் மகன் தருண், 11, மகள் காவியா, 8. இவர்களின் நண்பர் மகேந்திரன் மகன் சந்திப், 16. இவர்கள், 'இசூசூ' காரில், பெரம்பலுாரில் சினிமா பார்த்து விட்டு அரியலுார் திரும்பிக் கொண்டிருந்தனர்.
குன்னம் முருகன் எடைமேடை அருகே கார் சென்றபோது, மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி, சாலையின் இடது புறம் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இதில், கார்த்திகா சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த நான்கு பேர், அரியலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்னம் போலீசார் விசாரிக்கின்றனர்.

