/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மனு கொடுக்க வந்த மூதாட்டி மயக்கம்
/
மனு கொடுக்க வந்த மூதாட்டி மயக்கம்
ADDED : ஜூலை 12, 2011 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள்
குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தவர்கள், இரண்டுமணி நேரத்துக்குமேல்
வரிசையில் நின்றனர்.
சோர்வடைந்த மனுதாரர்களில், குளத்தூர் அடுத்த கிள்ளூர்
கிராமத்தைச் சேர்ந்த மீனாள்(65) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவரை அங்கு பணியில் நின்ற பெண் போலீஸ் உட்பட கலெக்டர் அலுவலக ஊழியர்கள்
மீட்டு '108' ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். தகவலறிந்து விரைந்துவந்த கலெக்டர் மகேஸ்வரி
மனுதாரர்களிடமிருந்து அவசர அவசரமாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.