sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

234 லட்சியம்; 200 நிச்சயம்: கட்சியினரை உசுப்பும் ரகுபதி

/

234 லட்சியம்; 200 நிச்சயம்: கட்சியினரை உசுப்பும் ரகுபதி

234 லட்சியம்; 200 நிச்சயம்: கட்சியினரை உசுப்பும் ரகுபதி

234 லட்சியம்; 200 நிச்சயம்: கட்சியினரை உசுப்பும் ரகுபதி

10


ADDED : செப் 04, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 04, 2024 06:36 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், குளத்துாரில், வடக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:

தி.மு.க., எப்போதுமே ஒரு இலக்கு வைத்து தான் தேர்தலில் போட்டியிடும். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கும் முன் கூட்டியே இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்படி இலக்கு நிர்ணயித்து போட்டியிட்டுத்தான், 40 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி வென்றது. இவ்வளவு வெற்றி பெற்ற பின்னும், மத்திய இண்டி கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது, துரதிருஷ்டம் தான்.

இப்போதைக்கு, 2026 சட்டசபை தேர்தலை நோக்கி நகர்கிறோம். அனைத்து, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தது, 200ல் வெற்றி பெறுவோம். தி.மு.க., தன் தொண்டர்களை நம்பியுள்ள இயக்கம்; தலைவர்களை நம்பியிருக்கும் இயக்கமல்ல. தி.மு.க., பெறும் வெற்றி அனைத்துக்கும் தொண்டர்கள் உழைப்பே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.Image 1316779

இருவர் மயக்கம்

குளத்துாரில் நடந்த தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணியை பெறுவதற்காக, கூட்டத்தில் பங்கேற்ற 3,000 பேரும் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் தடுமாறி சிலர் கீழே விழுந்தனர். இதில், இருவர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மயக்கம் தெளிந்து பிரியாணி சாப்பிட்டனர்.








      Dinamalar
      Follow us