sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

ரயில் நிலையத்தில் வீணாகும் 52,000 கிலோ அரிசி மூடைகள்

/

ரயில் நிலையத்தில் வீணாகும் 52,000 கிலோ அரிசி மூடைகள்

ரயில் நிலையத்தில் வீணாகும் 52,000 கிலோ அரிசி மூடைகள்

ரயில் நிலையத்தில் வீணாகும் 52,000 கிலோ அரிசி மூடைகள்


ADDED : ஏப் 18, 2024 01:05 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி வழங்குவதற்கு, புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து, 42 ரயில் பெட்டிகளில், 52,000 கிலோ அரிசி மூடைகள் வந்துள்ளது.

இவற்றை லாரிகள் வாயிலாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு கொண்டு சென்று அங்கிருந்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

தொடர்ந்து, ஒப்பந்ததாரர்களுக்கும், நுகர்பொருள் வாணிப கழகத்திற்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டால், அரிசி முடைகளை கொண்டு செல்வதற்கு லாரிகள் வரவில்லை.

தற்போது, ரயில்வே நிர்வாகம் 42 ரயில் பெட்டிகளில், மற்றொரு பொருட்களை ஏற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதால், அரிசி மூடைகளை உடனடியாக இறக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், ஒப்பந்ததாரர் ரயில் பெட்டிகளில் இருந்து அரிசி மூடைகளை ரயில் நிலையத்திலேயே இறக்கி வைத்துள்ளனர்.

அதில், பல அரிசி மூடைகள் கிழிந்து விட்டதால், அரிசி ஆங்காங்கே கொட்டி கிடக்கிறது. தற்போது, மழை பெய்தால், அரிசி மூடைகள் நனைந்து வீணாகி விடும்.

இதனால், தமிழக அரசிற்கு இழப்பு ஏற்படும். நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us