/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
'மாதம் ஒரு முறை எம்.பி., வருவார்'
/
'மாதம் ஒரு முறை எம்.பி., வருவார்'
ADDED : ஏப் 03, 2024 01:31 AM

புதுக்கோட்டை:சிவகங்கை லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளராக 'சிட்டிங்' எம்.பி., கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார்.
கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி பங்கேற்று, 'மக்களிடம் விரைவாக வாக்கு சேகரிப்பது எப்படி என்று மகளிர் அணிக்குத் தான் தெரியும். கார்த்தி சிதம்பரம் வெற்றி பெறுவதற்கு அனைவரும் தினமும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடவேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, தி.மு.க., மகளிர் அணியினர் தேர்தல் தொடர்பாக கருத்துக்களை கேட்டுக் கொண்டிருந்தனர்.
பின், ஸ்ரீநிதியிடம், 'எம்.பி.,யாக கார்த்தி சிதம்பரம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரை மாதம் ஒரு முறையாவது ஆலங்குடி சட்டசபை தொகுதிக்கு வர சொல்லுங்கள்; ஓட்டு சேகரிக்க செல்லும்போது பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர்' என்றும், குறைகளை தெரிவித்தனர்.
''இனிமேல் கட்டாயமாக, மாதம் ஒரு முறை தொகுதிக்கு எம்.பி., வருவார்,'' என, உறுதி அளிக்கிறேன் என ஸ்ரீநிதி கூறினார்; மகளிர் அணியினர் சமாதானம் அடைந்தனர்.

