sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

குடிநீர் தொட்டியில் சாணம் கலந்ததாக கிராமத்தினர் புகார்

/

குடிநீர் தொட்டியில் சாணம் கலந்ததாக கிராமத்தினர் புகார்

குடிநீர் தொட்டியில் சாணம் கலந்ததாக கிராமத்தினர் புகார்

குடிநீர் தொட்டியில் சாணம் கலந்ததாக கிராமத்தினர் புகார்

1


ADDED : ஏப் 26, 2024 02:02 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 02:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான் தெரு ஆதிதிராவிடர் காலனியில், 35க்கு மேற்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கின்றனர்.

அப்பகுதியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து, குடிநீர் கலங்கலாக வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதில் மாட்டு சாணம் கலந்துள்ளதை அறிந்தனர்.

மாட்டு சாணம் கலந்த குடிநீரை குடித்த அப்பகுதி மக்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது தொடர்பாக, கந்தர்வக்கோட்டை பி.டி.ஓ., மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அந்த குடிநீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஓராண்டுக்கு முன், குடிநீரில் மலம் கலந்ததாக எழுந்த புகாரில் இன்னமும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us