sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி; உறவினர் கைது

/

நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி; உறவினர் கைது

நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி; உறவினர் கைது

நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி; உறவினர் கைது


ADDED : ஜூலை 23, 2024 08:59 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், 20, இவரது உறவினர் சரவணன், 21. இருவரும், நாட்டு துப்பாக்கியுடன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு புறப்பட்டனர். அவர்கள் எடுத்துச் சென்ற நாட்டுத்துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, வெல்டிங் பட்டறைக்கு எடுத்து சென்றனர். அங்கு வெல்டிங் செய்து கொண்டிருந்த போது, நாட்டுத் துப்பாக்கியில் நிரப்பி வைத்திருந்த, 'பால்ரஸ்' குண்டுகள் வெடித்துச் சிதறின. அந்த குண்டுகள், லட்சுமணன் வயிற்றில் பாய்ந்தன. பலத்த காயமடைந்த அவரை, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.

அங்கிருந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட லட்சுமணன், சிகிச்சை பலனின்றி இறந்தார். இலுப்பூர் போலீசார், சரவணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us