sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

101 வயது முதியவர் பலி

/

101 வயது முதியவர் பலி

101 வயது முதியவர் பலி

101 வயது முதியவர் பலி


ADDED : மே 17, 2025 01:00 AM

Google News

ADDED : மே 17, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:பிழைப்புக்காக, 98 வயது வரை பனைமரம் ஏறி, வருவாய் ஈட்டி வாழ்ந்த முதியவர், 101வது வயதில் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா, 101. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, தனியாக வசிக்கின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

செல்லையா மட்டும் அவரது தோட்டத்தில் கொட்டகை அமைத்து தனியாக வசித்தார். தன் பிழைப்பிற்காக, 98 வயதுவரை பனைமரம் ஏறி, நுங்கு வெட்டி வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தினார்.

இந்நிலையில், செல்லையா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். கிராம மக்கள் திரளாக அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us