ADDED : மே 28, 2024 08:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாலையீடு தேவாலயத்தின் பாதிரியாராக ஜான்தேவசகாயம் என்பவர் இருந்து வருகிறார். இவரது மனைவி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் வெளியூரில் இருந்து இன்று காலை வீடு திரும்பிய நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.