sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

மீனவர் வலையில் சிக்கிய ஆண் உடல்

/

மீனவர் வலையில் சிக்கிய ஆண் உடல்

மீனவர் வலையில் சிக்கிய ஆண் உடல்

மீனவர் வலையில் சிக்கிய ஆண் உடல்


ADDED : ஜன 01, 2025 01:10 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி மீனவர்கள், நாட்டு படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து, 20-க்கும் மேற்பட்டோர் கரையில் இருந்து வலையை இழுத்து சிக்கிய மீன்களைப் பிடிப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலையில், கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையை படகுகளை பயன்படுத்தாமல், 20 பேர் சேர்ந்து கரைக்கு இழுத்தனர்.

வலையை இழுப்பதில் மிகவும் கடினமாக இருந்ததால், நிறைய மீன்கள் சிக்கி இருக்கும் என்ற எண்ணத்தில் மீனவர்களும் வலையை ஆர்வமுடன் இழுத்தனர்.

வலையை கரைக்கு கொண்டு வந்தபோது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல், வலையில் சிக்கி இருந்தது. அவரது, உடலில் இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் இரண்டு கற்கள் கட்டப்பட்டிருந்தன.

மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார், அந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர். சடலமாக கிடந்த இளைஞர் அணிந்திருந்த சட்டை காலரில் உள்ள டெய்லர் கடை ஸ்டிக்கரில், 'சேகர், கோட்டைப்பட்டணம்' என இருந்தது.






      Dinamalar
      Follow us