sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

தடையை மீறி பாலித்தீன் பயன்பாடு அதிகரிப்பு

/

தடையை மீறி பாலித்தீன் பயன்பாடு அதிகரிப்பு

தடையை மீறி பாலித்தீன் பயன்பாடு அதிகரிப்பு

தடையை மீறி பாலித்தீன் பயன்பாடு அதிகரிப்பு


ADDED : பிப் 15, 2024 09:15 PM

Google News

ADDED : பிப் 15, 2024 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் கடைகள், ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பயன்பாடு மீண்டும் தலைதுாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

பிளாஸ்டிக் தடை அமல் குறித்து தமிழக முதல்வரின் அறிவிப்பு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றங்கள் மற்றும் விளைநிலங்கள் பாதிப்பு ஆகியவற்றால் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி முதல் மாநிலம் முழுதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை, உணவு பாதுகாப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் தடையை அமலுக்கு கொண்டு வந்தனர்.

இதற்கு வணிகர்கள், மாவட்ட வர்த்தக கழகம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்கினர்.

பின்னர், மாவட்டம் முழுதும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பாத்திரங்கள் அல்லது துணி பைகளுடன் செல்வது உறுதியானது.

இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு வெகுவாக குறைந்தது. ஆனால், சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பகிரங்கமாக தள்ளுவண்டி முதல் சில கடைகள் வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை மீண்டும் வழங்க தொடங்கினர்.

இதனால், மாவட்டத்தில் மெல்ல மெல்ல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தலைதுாக்க துவங்கியது.

தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை அமல் குறித்து, தமிழக முதல்வரின் அறிவிப்பு, அமல்படுத்த முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

மேலும், சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவிப்பு காற்றில் பறந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு


பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் உண்டாகும் நச்சுப்புகையை சுவாசிப்பு மற்றும் சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக்கில் வைத்து உண்ணுதலால் புற்றுநோய் பாதிப்பு மற்றும் பிளாஸ்டிக் பைகளை சாக்கடையில் போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, அதிகாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் தடையை கறாராக அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us