sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'

/

அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'

அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'

அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'


ADDED : மே 16, 2025 07:27 AM

Google News

ADDED : மே 16, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவுடையார்கோவில் : பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்தார். மேலும், 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் வேளாணியை சேர்ந்தவர் சத்தியராஜ், 36; 'டாடா ஏஸ்' டிரைவர். இவரது மூன்றாவது மகன் தேவதர்ஷனின் முதல் பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இதில், சிக்கன், மட்டன், முட்டை என, தடபுடலாக அசைவ விருந்து நடந்தது. இதை, 60க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுள்ளனர். இதில், சிலருக்கு நள்ளிரவில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வேளாணியை சேர்ந்த கருப்பையா, 60, என்பவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதில், 28 பேர் ஏம்பல், அறந்தாங்கி மற்றும் சூரக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். ஏம்பல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us