/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
'பார்' திறக்க எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்
/
'பார்' திறக்க எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 17, 2025 03:01 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், 'மனமகிழ்' என்ற பெயரில், எப்.எல்., 2 மதுக்கூடம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில், எப்.எல்., 2 மதுக்கூடம் திறக்க, தனியாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதை திறக்கக்கூடாது என, பலமுறை அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், எப்.எல்., 2 மதுக்கூடம் திறப்பதற்கான ஏற்பாடு, தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில், ஆத்திரமடைந்த மக்கள், நேற்று புதுக்கோட்டை -- அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில், அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கணேஷ்நகர் போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். இதனால், புதுக்கோட்டை -- அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.