sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

பெண்ணிடம் வம்பு செய்தவரை கைது செய்ய கோரி போராட்டம்

/

பெண்ணிடம் வம்பு செய்தவரை கைது செய்ய கோரி போராட்டம்

பெண்ணிடம் வம்பு செய்தவரை கைது செய்ய கோரி போராட்டம்

பெண்ணிடம் வம்பு செய்தவரை கைது செய்ய கோரி போராட்டம்


ADDED : ஆக 04, 2025 12:58 PM

Google News

ADDED : ஆக 04, 2025 12:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றவரை கைது செய்யக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், சவேரியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சலேத்துமேரி, 40. இவர் தச்சன்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் சமையல் வேலைக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். ஜூலை 30ம் தேதி காலையில், அவர் பணிக்கு சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த பஞ்சர் கடை நடத்தி வரும் பாஸ்கர், 42, என்பவர், அவரை வழிமறித்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

கந்தர்வகோட்டை போலீசில் அவர் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், செங்கிப்பட்டி-- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் தச்சங்குறிச்சி பகுதியில் நேற்று சாலை மறியல் செய்தனர்.

அவர்களிடம் பேச்சு நடத்திய போலீசார், மானபங்கம் படுத்த முயன்றவரை, விரைவில் கைது செய்வதாக உறுதி கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us