sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

புதுகையில் மனிதசங்கிலி தே.மு.தி.க., திடீர் முடிவு

/

புதுகையில் மனிதசங்கிலி தே.மு.தி.க., திடீர் முடிவு

புதுகையில் மனிதசங்கிலி தே.மு.தி.க., திடீர் முடிவு

புதுகையில் மனிதசங்கிலி தே.மு.தி.க., திடீர் முடிவு


ADDED : ஜூலை 19, 2011 12:41 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், நகராட்சி நிர்வாகத்தை கலைக்கக் கோரியும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதென தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது.புதுக்கோட்டையில் தே.மு.தி.க., மாவட்டக்குழு கூட்டம் நடந்தது.

மாவட்டச் செயலாளர் ஜாஹீர் தலைமை வகித்தார். பொருளாளர் கதிரவன், நகரச் செயலாளர் சிங்கமுத்து உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டையில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட நகர்ப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய மறுத்துவரும் நகராட்சி நிர்வாகம், வார்டுகளின் எண்ணிக்கையை குறைப்பது, வளர்ச்சிப் பணிகளுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசிடமே திருப்பி ஒப்படைப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை கண்டித்தும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய மறுத்துவரும் நகராட்சி நிர்வாகத்தை கலைக்கக் கோரியும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதென கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us