sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

320 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு கியூபிரிவு போலீசார் விசாரணை

/

320 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு கியூபிரிவு போலீசார் விசாரணை

320 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு கியூபிரிவு போலீசார் விசாரணை

320 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு கியூபிரிவு போலீசார் விசாரணை


ADDED : ஜன 13, 2025 01:10 AM

Google News

ADDED : ஜன 13, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: புதுக்கோட்டையில் 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை கியூ பிரிவு போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் விசாரணை நடத்தினர். ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜன.10 ல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது இறால் கொண்டு செல்லும் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பெட்டிகள் இருந்தன. அந்த பெட்டிகளுக்கு இடையில் 10 மூடைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

போலீசார் 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் 32, பிரகாஷ் 32, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்த போது கஞ்சாவை தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை பகுதியில் இறக்கி அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

இந்த கடத்தலுக்கு தொண்டி மற்றும் நம்புதாளையை சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே சென்னை கியூ பிரிவு போலீசார் தொண்டி, நம்புதாளை பகுதியில் விசாரணை நடத்தி இரண்டு பேரை மேல் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us