ADDED : நவ 19, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்துார் காசிராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
குளத்துார் அருகே வத்தனாக்குறிச்சியில் ஒருவர் கல் குவாரி நடத்தினார். அனுமதித்த அளவைவிட விதிகளை மீறி அதிக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. 'ட்ரோன்' மூலம் சர்வே செய்ய வேண்டும். கிரிமினல் நடவடிக்கை மேற்கொண்டு, அபராத தொகையை வசூலிக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதிகள் கலெக்டர், கனிமவள உதவி இயக்குனர் தற் போதைய நிலை குறித்து டிச.17 ல் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டனர்.

