/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ரயில்வே கேட் திறக்க மறுத்த ஊழியருக்கு கத்திக்குத்து
/
ரயில்வே கேட் திறக்க மறுத்த ஊழியருக்கு கத்திக்குத்து
ரயில்வே கேட் திறக்க மறுத்த ஊழியருக்கு கத்திக்குத்து
ரயில்வே கேட் திறக்க மறுத்த ஊழியருக்கு கத்திக்குத்து
ADDED : ஜன 02, 2026 01:52 AM
புதுக்கோட்டை: ரயில்வே கேட் கீப்பரை கத்தியால் குத்திய ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மேலதேமுத்துப்பட்டி ரயில்வே கேட்டில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த தீரஜ்குமார், 31, கேட் கீப்பராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, ராமேஸ்வரத்திலிருந்து- சென்னைக்கு செல்லும் ரயிலுக்காக ரயில்வே கேட்டை மூடியுள்ளார்.
அவ்வழியாக, பைக்கில் வந்த ரவுடியான சரித்திர பதிவேடு குற்றவாளியான அதே கிராமத்தை சேர்ந்த கார்த்தி, 40, ரயில்வே கேட்டை திறக்க கோரி, தீரஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கார்த்தி, தீரஜ்குமாரை கத்தியால் குத்தினார். காயமடைந்த தீரஜ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரைக்குடி ரயில்வே போலீசார், கார்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

