sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

மொபைல் போனை விரும்பி உயிரை விட்ட தங்கை; அண்ணனும் பலி

/

மொபைல் போனை விரும்பி உயிரை விட்ட தங்கை; அண்ணனும் பலி

மொபைல் போனை விரும்பி உயிரை விட்ட தங்கை; அண்ணனும் பலி

மொபைல் போனை விரும்பி உயிரை விட்ட தங்கை; அண்ணனும் பலி

12


UPDATED : பிப் 18, 2025 07:40 AM

ADDED : பிப் 18, 2025 04:28 AM

Google News

UPDATED : பிப் 18, 2025 07:40 AM ADDED : பிப் 18, 2025 04:28 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்டையூர்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் - ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன், 18; மகள் பவித்ரா, 16. மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.

மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த பவித்ரா, பெற்றோர் கண்டித்தும் மொபைல் போனில் மூழ்கி கிடந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அவர், மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த போனை பறித்து, துாங்க செல்லுமாறு மணிகண்டன் அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால், போனை திருப்பிக் கேட்டு சண்டையிட்டதால், மணிகண்டன் தரையில் வீசி உடைத்துள்ளார். மனமுடைந்த பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்தார். அவரை காப்பாற்ற மணிகண்டனும் குதித்தார். நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி இறந்த நிலையில், பவித்ரா, மணிகண்டன் இருவரையும் மீட்டனர். மண்டையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us