sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மர்ம மரணம்

/

முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மர்ம மரணம்

முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மர்ம மரணம்

முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மர்ம மரணம்


ADDED : நவ 03, 2024 03:11 AM

Google News

ADDED : நவ 03, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டம், அரியணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன், 20, முருகானந்தம், 22, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அதன்பின், பல மணி நேரமாகியும், வீடு திரும்பாததால் உறவினர்கள் இருவரையும் தேடினர். தொடர்ந்து, இருவரும் அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று இறந்து கிடந்தனர். தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் கூறியதாவது:

மின்சாரம் பாய்ந்து இரண்டு இளைஞர்களும் இறந்திருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தோட்டத்துக்காரர்கள் யாரேனும் அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி இறந்த இளைஞர்களின் உடலை, வனப்பகுதியில் வீசினார்களா அல்லது மின் ஒயர் ஏதேனும் அறுந்து கிடந்து அதை மிதித்து இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us