sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை கொலை செய்த மனைவி கைது

/

செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை கொலை செய்த மனைவி கைது

செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை கொலை செய்த மனைவி கைது

செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை கொலை செய்த மனைவி கைது


ADDED : ஜூலை 19, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:மது போதையில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவனை, அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன், 54; வி.சி., கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் டிரைவராகவும் பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம், சண்முகநாதன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, மனைவி தனலட்சுமி பனையப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சண்முகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், சண்முகநாதன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. தனலட்சுமி, 45, மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, விசாரணை நடத்தினர்.

இதில், தனலட்சுமிக்கு, சண்முகநாதன் மது அருந்தி தினமும் செக்ஸ் டார்ச்சர் மற்றும் உடல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததும், ஆத்திரமடைந்த தனலட்சுமி அவரை கம்பியால் அடித்து கொலை செய்து, இறந்து கிடப்பதாக நாடகமாடி போலீசில் புகார் செய்ததும் தெரியவந்தது.

தனலட்சுமியை பனையப்பட்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us