sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நடை பயிற்சியாளர்கள் அவதி

/

நடை பயிற்சியாளர்கள் அவதி

நடை பயிற்சியாளர்கள் அவதி

நடை பயிற்சியாளர்கள் அவதி


ADDED : பிப் 19, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள முகவை ஊருணி கரையில் உள்ள நடை பாதையில் மின்விளக்குகள் எரியாததால் அங்கு நடைப்பயிற்சி செல்வோர் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் அரண்மனை வடக்கு, மேற்கு, அக்ரஹாரம் பகுதிகளை மையமாக கொண்டு 25 ஏக்கரில் முகவை ஊருணி வெட்டியுள்ளனர்.மதுரையில் இருந்து பெரிய கண்மாய்க்கு வரும் வைகை ஆற்று தண்ணீரை கால்வாய் அமைத்து முகவை ஊருணிக்கு கொண்டு வந்துள்ளனர். மழைநீர் முழுவதும் சேமிக்க முடிவதால் ஊருணியில் எப்போதுமே தண்ணீர் உள்ளது. தற்போது சிலர் கழிவுநீரை விடுகின்றனர். குப்பையும் கொட்டுவதால் ஊருணி நீர் மாசடைகிறது.இந்நிலையில் ஊருணியை ஆழப்படுத்தி சுற்றிலும் வேலி அமைத்து, கரையில் நடைபாதை அமைத்துள்ளனர்.

இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக மின்விளக்குகள் எரியாததால் மாலை, அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை. இருள் சூழ்ந்துள்ளதால் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

எனவே முகவை ஊருணில் மின்விளக்குகளை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us