/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக்கிரமிப்பில் வரத்துக்கால்வாய் விவசாயம் பாதிக்கும் அபாயம்
/
ஆக்கிரமிப்பில் வரத்துக்கால்வாய் விவசாயம் பாதிக்கும் அபாயம்
ஆக்கிரமிப்பில் வரத்துக்கால்வாய் விவசாயம் பாதிக்கும் அபாயம்
ஆக்கிரமிப்பில் வரத்துக்கால்வாய் விவசாயம் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜூலை 13, 2011 02:31 AM
ராமநாதபுரம் : திருவாடானை அருகே சின்ன தொண்டி கண்மாய் வரத்துக் கால்வாய்
ஆக்கிரமிப்பில் உள்ளதால், விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது.திருவாடானை
தளிர் மருங்கூரில் உள்ளது சின்ன தொண்டி கண்மாய்.
இந்த கண்மாய் மூலம்
500க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாய்க்கு நீர்
வரத்துள்ள தென் வரத்துக்காலில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதை சர்வே
செய்து அகற்ற கோரி சின்ன கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில்
9.4.2010ல் பணம் கட்டப்பட்டது. இதுவரை சர்வேயும் நடக்கவில்லை.
ஆக்கிரமிப்பும் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள்,
கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்தனர்.

