
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி பெரிய பாளையரேந்தல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நேற்று காலை 10:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்த பின்பு மூலவர்கள் யோக கணபதி, முத்து மாரியம்மன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர் கோயில் சன்னதி விமான கலசங்களில் திருப்புல்லாணி பாபு சாஸ்திரி குழுவினரால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவர்கள், பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.