/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
19 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம்
/
19 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம்
19 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம்
19 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம்
ADDED : ஆக 07, 2024 08:57 AM
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடிய ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம் விதித்தும் கட்டத்தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.
ஜூன்., 22 ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ஜஸ்டின், ரைமண்ட், ஹெரின் ஆகியோரது 3 விசைப்படகுகள் அதிலிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
அவர்களுக்கு ஆக.,20 நீதிமன்ற வாய்தா நாளாக இருந்த நிலையில் மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை முடித்து வைக்க கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யாழ்ப்பாணம் நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று 22 மீனவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களில் 19 பேரை நீதிபதி விடுவித்தார். மூன்று படகுகள் டிரைவர்கள் காளீஸ்வரன் 40, கருப்பையா 47, ஜெகன் 29, ஆகியோருக்கு இலங்கை மதிப்பில் தலா ரூ.40 லட்சம்(இந்திய மதிப்பில் ரூ.11.20 லட்சம்) அபராதம் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மத்திய அரசு பாராமுகம்
மீனவர்களுக்கு அப ராதம், சிறை தண்டனை விதித்து மீன்பிடித் தொழிலை முற்றிலும் அழிக்க இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது. இதனை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என மீனவர்கள் சங்க தலைவர் சகாயம் தெரிவித்தார்.