/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை
/
தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை
ADDED : ஜூலை 30, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:கடந்த ஜூலை 1ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தொண்டியில் இருந்து, நான்கு நாட்டுப்படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். விசாரணை நாளான நேற்று 25 பேரையும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 14 பேரை விடுதலை செய்தது. அதுபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 22 பேருக்கு, ஆக., 8 வரை சிறை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.