sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 220 பேர் மனு: திட்ட உதவி வழங்கல்

/

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 220 பேர் மனு: திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 220 பேர் மனு: திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 220 பேர் மனு: திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜூன் 10, 2024 11:10 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : லோக்சபா தேர்தல் முடிந்த பின் 2 மாதங்களுக்கு பிறகு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 220 பேர் மனு அளித்தனர். அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 220 மனுக்கள் பெற்றார்.

மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் வீதம் 3 பேருக்கு இயற்கை நிவாரண உதவித் தொகையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பேருக்கு ரூ.86 ஆயிரத்து 280ல் காதொலி கருவி மற்றும் திறன் பேசி கருவிகள் வழங்கப்பட்டன.

கூட்டுறவுத்துறையில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஆதரவற்ற குழந்தைகளின் நிதி ஆதாரத் திட்டத்திற்கான புதிய வங்கி கணக்கு சேவைக்கான பதாகையை கலெக்டர் வெளியிட்டார்.

பள்ளி கல்வித்துறையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வி பெற்றவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

உதவி கலெக்டர் (பயிற்சி) மொகத் இர்பான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us