sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வாலிநோக்கம் கடற்கரையில் 2468 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தவிருந்தது பறிமுதல்

/

வாலிநோக்கம் கடற்கரையில் 2468 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தவிருந்தது பறிமுதல்

வாலிநோக்கம் கடற்கரையில் 2468 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தவிருந்தது பறிமுதல்

வாலிநோக்கம் கடற்கரையில் 2468 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தவிருந்தது பறிமுதல்


ADDED : மார் 22, 2024 01:54 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிநோக்கம்:ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2468 கிலோ பீடி இலைகளை கைப்பற்றி தப்பிய மர்மநபர்களை மரைன் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் கடலோர பகுதியிலிருந்து சமீப காலமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம், மஞ்சள், வலி நிவாரணி, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடலில் சீலா மீன்பாடு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியானது. ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கடலோரத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் தலா 30 கிலோ எடையுள்ள 85 சாக்கு மூடைகளில் 2468 கிலோ பீடி இலைகள் பார்சல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வாகனம், பீடி இலைகளை அவர்கள் பறிமுதல் செய்து வாலிநோக்கம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் குறித்து மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us