sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கையில் விடுதலையான 3 மீனவர்கள் வீடு திரும்பினர்

/

இலங்கையில் விடுதலையான 3 மீனவர்கள் வீடு திரும்பினர்

இலங்கையில் விடுதலையான 3 மீனவர்கள் வீடு திரும்பினர்

இலங்கையில் விடுதலையான 3 மீனவர்கள் வீடு திரும்பினர்


ADDED : மே 11, 2024 02:29 AM

Google News

ADDED : மே 11, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:- இலங்கையில் சிறை தண்டனையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் விமானத்தில் சென்னை வந்திறங்கி வீட்டுக்கு வந்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து பிப்.4ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ராபர்ட் 40, பெக்கர் 38, ஜால்சன் 42, ஆகியோர் படகு டிரைவர் என்பதால் எல்லைதாண்டிவந்து மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்ததால் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இம்மீனவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். ஏப்.30ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சூசைதாசன் ,மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதன் பின் மீனவர்களை கொழும்பு மெரிகானா முகாமில் போலீசார் தங்க வைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான மூலம் நேற்று முன்தினம் மாலை சென்னை வந்திறங்கினர். இவர்களை ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் வரவேற்று நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us