/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக.,22 வரை ராமேஸ்வரம் மீனவர்கள் 35 பேருக்கு சிறை
/
ஆக.,22 வரை ராமேஸ்வரம் மீனவர்கள் 35 பேருக்கு சிறை
ADDED : ஆக 10, 2024 02:40 AM

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 35 பேரை ஆக., 22வரை சிறையில் அடைக்க புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக.,8ல் பாம்பன், தங்கச்சிமடத்தில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து கல்பிட்டியா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக நேற்று போலீசார் வழக்கு பதிந்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆக., 22 வரை புத்தளம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இச்சம்பவம் பாம்பன் மீனவர்கள், குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.