/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குரூப் 2 தேர்வில் 3752 பேர் ஆப்சென்ட்
/
குரூப் 2 தேர்வில் 3752 பேர் ஆப்சென்ட்
ADDED : செப் 14, 2024 11:52 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்நடத்திய குரூப் 2, 2 ஏ தேர்வில் 3752 பேர் தேர்வு எழுத வரவில்லை. 11 ஆயிரத்து 905 பேர் தேர்வு எழுதினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 2, 2 ஏ தேர்வு 47 மையங்களில் 56 தேர்வு அறைகளில் நடந்தது. இரு தேர்வு கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் 55 தேர்வு மையங்களின் பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு மையங்களை கண்காணிக்க 13 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் இரு பறக்கும் படை குழுக்கள் தேர்வு அறைகளை கண்காணித்தனர். 57 வீடியோ கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு எஸ்.ஐ., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் சேதுபதிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மையத்திலும், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி தேர்வு மையத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
தேர்வர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 657 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். 11 ஆயிரத்து 905 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 3752 பேர் தேர்வு எழுத வரவில்லை.