sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நெடுஞ்சாலை இன்ஜினியரிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்

/

நெடுஞ்சாலை இன்ஜினியரிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்

நெடுஞ்சாலை இன்ஜினியரிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்

நெடுஞ்சாலை இன்ஜினியரிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூன் 15, 2024 01:55 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை காட்டு பரமக்குடியில் நபார்டு மற்றும் ஊரக ரோடு பிரிவு கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு வரை நீடித்த சோதனையில், கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு, தற்காலிக பணியாளர் ஹரிஹரன், இளநிலை உதவியாளர் சதீஷ், அலுவலக கண்காணிப்பாளர் அருளானந்தம் ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத 1 லட்சத்து 38,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6:50 மணிக்கு, சேதுபதி நகரில் உள்ள கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு வீட்டில் சோதனை செய்ததில், கணக்கில் வராத 3 லட்சத்து 2,300 ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த போலீசார், நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us