/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலை இன்ஜினியரிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்
/
நெடுஞ்சாலை இன்ஜினியரிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2024 01:55 AM
பரமக்குடி:மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை காட்டு பரமக்குடியில் நபார்டு மற்றும் ஊரக ரோடு பிரிவு கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு வரை நீடித்த சோதனையில், கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு, தற்காலிக பணியாளர் ஹரிஹரன், இளநிலை உதவியாளர் சதீஷ், அலுவலக கண்காணிப்பாளர் அருளானந்தம் ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத 1 லட்சத்து 38,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6:50 மணிக்கு, சேதுபதி நகரில் உள்ள கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு வீட்டில் சோதனை செய்ததில், கணக்கில் வராத 3 லட்சத்து 2,300 ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த போலீசார், நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.