sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.51.60 லட்சம் மஞ்சள் பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.51.60 லட்சம் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.51.60 லட்சம் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.51.60 லட்சம் மஞ்சள் பறிமுதல்


ADDED : ஆக 05, 2024 08:40 PM

Google News

ADDED : ஆக 05, 2024 08:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.51.60 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மண்டபம் மரைக்காயர்பட்டினம் தெற்கு கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 43 மூடையில் பதுக்கி வைத்திருந்த 1290 கிலோ மஞ்சளை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது இருளில் பதுங்கி இருந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்ததில் மூடைகளுக்கு பாதுகாப்பாக இருந்ததாக கூறினார். சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

பறிமுதல் செய்த மஞ்சளை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தனர். கடத்தல்காரர்களை போலீசார் தேடுகின்றனர். இந்த மஞ்சளின் இலங்கை மதிப்பு ரூ. 51.60 லட்சம்.

*தட்டுபாடு :

கொரோனா பரவிய 2020ம் ஆண்டில் மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்தது. இதன் பின் அத்தியாவசிய பொருள்கள் உற்பத்தியை ஊக்குவிக்காமலும், இறக்குமதி தடையை இலங்கை அரசு நீக்காததாலும் இஞ்சி, மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4000, இஞ்சி ரூ. 3500 க்கும் விற்கின்றனர். இதனால் துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், இஞ்சி தடையின்றி கடத்திச் செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us