sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில்  ராமநாதபுரத்தில் 8582பேர் 'ஆப்சென்ட்'

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில்  ராமநாதபுரத்தில் 8582பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில்  ராமநாதபுரத்தில் 8582பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில்  ராமநாதபுரத்தில் 8582பேர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜூன் 10, 2024 05:53 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் 41 ஆயிரத்து 445 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 8582 பேர் தேர்வு 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். 32 ஆயிரத்து 863 பேர் தேர்வு எழுதினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பணியாளர்தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது.

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 இளநிலை உதவியாளர், வி.ஏ.ஓ., ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு காலை 9:30 முதல் 12:30 மணி வரை 146 மையங்களில் 165 அறைகளில் தேர்வு நடந்தது.

இதில் பத்தாம்வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பட்டதாரிகள், முதுநிலை, இன்ஜினியரிங் பட்டதாரிகள் கூட இந்த தேர்வினை எழுதினர்.

தேர்வு நடக்கும் மையங்களில் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரி மையத்தையும், சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தினையும் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டார்.

பின் அவர் கூறியதாவது: இந்த தேர்வில் 32 ஆயிரத்து 863 பேர் தேர்வு எழுதினர். ஒவ்வொரு அறக்கும் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விடைத்தாளை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சேர்க்க நகர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணியின் போது கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், கடலாடி தாசில்தார் ரெங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us