sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிவகங்கை சார் பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு

/

சிவகங்கை சார் பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு

சிவகங்கை சார் பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு

சிவகங்கை சார் பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு


ADDED : ஆக 21, 2024 08:49 PM

Google News

ADDED : ஆக 21, 2024 08:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய சிவகங்கை சார் பதிவாளர் பெத்துலட்சுமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பெத்துலட்சுமி, 48. ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சார் பதிவாளராக கடந்த ஆண்டு பணியாற்றியபோது பத்திர எழுத்தர் மற்றும் இடைத்தரகர்களை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது.

ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கண்காணித்தனர். கடந்த 2023 அக்.19ல் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இடைத்தரகர்களிடம் பணம் பெற்ற போது போலீசார் பெத்துலட்சுமியிடம் இருந்து 1 லட்சத்து 84,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பின், அவர் வீட்டில் சோதனை நடத்தி கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் அவரது சொத்து விபரங்களை சேகரித்தனர்.

இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக பெத்துலட்சுமி சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பெத்துலட்சுமி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

பெத்துலட்சுமி தற்போது சிவகங்கை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றுகிறார்.






      Dinamalar
      Follow us