/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவகங்கை சார்பதிவாளர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு
/
சிவகங்கை சார்பதிவாளர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு
சிவகங்கை சார்பதிவாளர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு
சிவகங்கை சார்பதிவாளர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு
ADDED : ஆக 21, 2024 01:33 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய சிவகங்கை சார்பதிவாளர் பெத்துலட்சுமி மீது வருமானத்திற்கு அதிகமாகசொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பெத்துலட்சுமி 48. இவர் ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சார்பதிவாளர்அலுவலகத்தில் கடந்த ஆண்டு பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றியபோது பத்திர எழுத்தர் மற்றும் இடைத்தரகர்களை பயன்படுத்திலஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை தொடர்ந்து கண்காணித்துவந்தனர். 2023 அக்.19ல் ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் இடைத்தரகர்களிடம் பணம் பெற்ற போது போலீசார் சோதனை மேற்கொண்டு பெத்துலட்சுமியிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரது வீட்டை சோதனை செய்து கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் அவரது சொத்துவிபரங்களை சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் அவர் தனதுவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புபோலீசார் பெத்துலட்சுமி மீது நேற்று சொத்து குவிப்புவழக்கு பதிவு செய்துள்ளனர். பெத்துலட்சுமி தற்போது சிவகங்கை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றுகிறார்.

