/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
/
மாரி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மாரி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மாரி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 01, 2024 04:27 AM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரியில் மாரியம்மன் கோயில் 4ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு ஜூலை 17ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஜூலை 21 மாலை முத்து எடுத்தல் நிகழ்ச்சியும், ஜூலை 23ல் முத்து பரப்புதல் நடந்தது.
தொடர்ந்து பத்து நாட்கள் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம் களரி விநாயகர் கோயிலில் இருந்து கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
நேற்று காலை ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டனர். மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். மாலையில் களரி ஊருணியில் பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஹிந்து சத்திரிய நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் மக்கள் பணி இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
* பெரியபட்டினம் அருகே தோப்புவலசை மாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு தோப்புவலசை மன்னார் வளைகுடா கடலில் பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தோப்புவலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* பெரியபட்டினம் அருகே இலங்காமணி கிராம பத்திரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. நேற்று மாலை அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல பாரி சுமந்து வந்த பெண்கள் ஊர்வலமாக வலம் வந்தனர். பெரியபட்டினம் ஊருணியில் பாரி கரைக்கப்பட்டது. முன்னதாக ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. ஏற்பாடுகளை இலங்காமணி கிராம மக்கள் செய்திருந்தனர்.