sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

4 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடி கடலில் உருவான புதிய மணல் திட்டு

/

4 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடி கடலில் உருவான புதிய மணல் திட்டு

4 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடி கடலில் உருவான புதிய மணல் திட்டு

4 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடி கடலில் உருவான புதிய மணல் திட்டு

1


ADDED : ஆக 25, 2024 02:28 AM

Google News

ADDED : ஆக 25, 2024 02:28 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு உருவான மணல் திட்டில் நின்று சுற்றுலாப்பயணிகள் கடல் அலைகளை கண்டு ரசித்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புயலில் இடிந்த கட்டடங்கள், கடல் அலைகளை கண்டு ரசிக்கின்றனர். இதனால் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் தனுஷ்கோடி தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகின்றன. இச்சூழலில் அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா வடக்கு பகுதியில் திடீரென 200 மீ., சுற்றளவில் மணல் திட்டு உருவாகியுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் நின்றபடி கடல் அழகை ரசித்து ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.

பருவ கால மாற்றத்திற்கு ஏற்ப ஆண்டுக்கு ஒருமுறை இது போன்ற மணல் திட்டுகள் உருவாகும். ஆனால் அரிச்சல்முனை வடக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மணல் திட்டு உருவாகியுள்ளது என தனுஷ்கோடி மீனவர் உமையவேல் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us