sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் பாதுகாப்பின்றி குடிசையில் தபால் நிலையம்

/

தனுஷ்கோடியில் பாதுகாப்பின்றி குடிசையில் தபால் நிலையம்

தனுஷ்கோடியில் பாதுகாப்பின்றி குடிசையில் தபால் நிலையம்

தனுஷ்கோடியில் பாதுகாப்பின்றி குடிசையில் தபால் நிலையம்


ADDED : ஜூன் 30, 2024 02:21 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:புனித மற்றும் வணிக நகரமாக விளங்கிய தனுஷ்கோடி, 1964ல் ஏற்பட்ட புயலில் உருக்குலைந்தது. இங்குள்ள தபால் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதிகள் இடிந்து தரைமட்டமாகின.

இதையடுத்து, 53 ஆண்டுகளுக்கு பின் 2017 பிப்ரவரி, 22ல் தனுஷ்கோடியில் கிளை தபால் நிலையம் திறக்கப்பட்டு, குடிசையில் இயங்கியது. இதன் வாயிலாக இங்குள்ள, 200க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஹோட்டல் நடத்தும் வியாபாரிகள் பலரும் சேமிப்பு கணக்கு துவக்கி, பணம் சேமிக்கும் பழக்கமும் உருவானது. இது, மீனவர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இங்கு வீசிய சூறைக்காற்றில் ஓராண்டாக தபால் நிலைய குடிசை முற்றிலும் பெயர்ந்து, மழைநீர் புகும் அவல நிலை உள்ளது.

இதனால், சேமிப்பு கணக்கு புத்தகம், பதிவேடுகளை, ராமேஸ்வரம் தலைமை தபால் நிலையத்திற்கு ஊழியர் எடுத்துச் செல்வதும், காலையில் பணிக்கு வரும் போது மீண்டும் சுமந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

எனவே, இங்கு நிரந்தர கட்டடத்தில் தபால் நிலையம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us