sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம்

/

திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம்

திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம்

திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம்


ADDED : ஜூலை 16, 2024 05:53 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை, : திருவாடானையில் புதிய ஜெயில் கட்டடம் கட்டுவதற்கான திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திருவாடானையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஜெயில் இருந்தது. கட்டடம் மிகவும் சேதமடைந்ததால் 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் கைது செய்யப்படும் கைதிகள் ராமநாதபுரம் கிளை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

நீண்ட துாரம் கைதிகளை அழைத்து செல்வவதால் போலீசார் சிரமம் அடைகின்றனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஜெயில் கட்டடம் கட்ட ரூ.2 கோடியே 28 லட்சத்து 16 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் போதிய இடம் கிடைக்காமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த மே 3 ல் கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி. சந்தீஸ், மாவட்ட சிறை அலுவலர் தவமணி உள்ளிட்ட அதிகாரிகள் கட்டடம் கட்டுவதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். புதிய ஜெயில் கட்ட 2 ஏக்கர் இடம் தேவைப்பட்டதால் பெரியகீரமங்கலம் ஊராட்சி சின்னக் கீரமங்கலத்தில் உள்ள இடத்தை பார்வையிட்டனர். ஆனால் இதுவரை பணிகளை துவங்கவில்லை. விரைவில் பணிகளை துவக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us