/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எல்லோரும் மஞ்சப்பைக்கு மாறுங்க நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி
/
எல்லோரும் மஞ்சப்பைக்கு மாறுங்க நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி
எல்லோரும் மஞ்சப்பைக்கு மாறுங்க நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி
எல்லோரும் மஞ்சப்பைக்கு மாறுங்க நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி
ADDED : ஜூலை 04, 2024 01:11 AM
கீழக்கரை: உலக பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப் பையை பொதுமக்கள் அனைவரும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வீன் (பொறுப்பு) வரவேற்றார். துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, அலுவலர்கள் தமிழ்செல்வன், உதயகுமார், ஹாஜா மற்றும் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரசார வாகனம் முழுவதும் மஞ்சப்பை கொண்டு அலங்கரிக்கப்பட்டது
வாகனத்தை துவக்கி வைக்கும் கொடி முழுவதும் மஞ்சப் பையால் செய்யப்பட்டிருந்தது.
நகரில் பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மஞ்சப்பைக்கு மாறுவோம் என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.