sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முகநுாலில் சர்ச்சை கருத்து கீழக்கரை வாலிபர் கைது

/

முகநுாலில் சர்ச்சை கருத்து கீழக்கரை வாலிபர் கைது

முகநுாலில் சர்ச்சை கருத்து கீழக்கரை வாலிபர் கைது

முகநுாலில் சர்ச்சை கருத்து கீழக்கரை வாலிபர் கைது


ADDED : ஆக 20, 2024 04:31 AM

Google News

ADDED : ஆக 20, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: வெளி நாட்டில் இருந்து முகநுால் பக்கத்தில் சர்சசைக்குரிய கருத்துகளை பதிவு செய்த கீழக்கரை வாலிபர் ஊர் திரும்பிய போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதள பக்கங்களை 2021 மே மாதம் கண்காணித்து வந்தனர். அப்போது ஒருவரது முகநுால் பக்கத்தில் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய பொது அமைதியை சீர்குலைக்கும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது குறித்து தொழில் நுட்ப பிரிவு எஸ்.ஐ., ரிச்சர்ட்சன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

அந்த நபர் கீழக்கரை தச்சர் தெருவை சேர்ந்த புக்கானுதீன் மகன் அல்தாப் அசேன் 27, என தெரிய வந்தது. சவுதி அரேபியாவில் பணிபுரியும் அவர் அங்கிருந்து முகநுாலில் கருத்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் அல்தாப் அசேன் நாடு திரும்பிய போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தெரிவித்தனர். ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் மும்பை சென்று அல்தாப் அசேனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us