/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
/
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
ADDED : ஆக 09, 2024 10:40 PM

திருவாடானை: திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக.6ல் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் ஆடித் தபசு அலங்காரத்தில் சிநேகவல்லி அம்மன் எழுந்தருளினார். நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் திருமண அலங்காரத்தில் இருந்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம்,இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இன்று சுந்தரர் கைலாய காட்சி, நாளை உற்ஸவ சாந்தி நடக்கிறது.

