/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடிகர் சீனிவாசன் செக் மோசடி வழக்கு
/
நடிகர் சீனிவாசன் செக் மோசடி வழக்கு
ADDED : மே 01, 2024 01:50 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பிள்ளையார் கோயில் பகுதியைசேர்ந்தவர் முனியசாமி 60. இறால் பண்ணை, உப்பளம் நடத்தி வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக வங்கியில் ரூ.15 கோடி கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார்.
இதையறிந்த நடிகர் சீனிவாசன் தான் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ. 15 லட்சம் முத்திரை கட்டணம் செலுத்தவேண்டும் என முனியசாமியிடம் ரூ.15 லட்சம் வாங்கியுள்ளார். பணத்தைபெற்றவர் கடன் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார்.பணத்தை திருப்பி கேட்ட போதுரூ.14 லட்சத்திற்கான காசோலையை முனியசாமியிடம் சீனிவாசன் வழங்கினார்.
சீனிவாசன் வங்கி கணக்கில் பணமின்றி காசோலை திரும்பியது. இது தொடர்பாகமுனியசாமி, ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நேற்று இந்த வழக்கு விசாரணையில் நடிகர் சீனிவாசன் ஆஜராகாத நிலையில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கிருபாகரன் வாதம் செய்தார்.சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர் வாதத்திற்காக வழக்கை மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் மே 6 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.