sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நடிகர் சீனிவாசன் மீதான செக்மோசடி வழக்கு ஜூன் 24க்கு தள்ளிவைப்பு

/

நடிகர் சீனிவாசன் மீதான செக்மோசடி வழக்கு ஜூன் 24க்கு தள்ளிவைப்பு

நடிகர் சீனிவாசன் மீதான செக்மோசடி வழக்கு ஜூன் 24க்கு தள்ளிவைப்பு

நடிகர் சீனிவாசன் மீதான செக்மோசடி வழக்கு ஜூன் 24க்கு தள்ளிவைப்பு


ADDED : ஜூன் 13, 2024 05:35 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: சினிமா நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ரூ.14 லட்சம் செக்மோசடி வழக்கில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விசாரணை ஜூன்24க்கு தள்ளி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 60, இறால் பண்ணை, உப்பள தொழில் செய்கிறார். இவர் தொழில் அபிவிருத்திக்காக ரூ.15 கோடி கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்துள்ளார்.

இதனை அறிந்த சினிமா நடிகர்பவர்ஸ்டார் சீனிவாசன் தான் கடன் வாங்கி தருவதாக கூறி அதற்காக ரூ.15 லட்சம் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும் என முனியசாமியிடம் ரூ.15 லட்சம் வாங்கினார்.

பணத்தை பெற்றுக்கொண்ட சீனிவாசன் கடன் வாங்கித்தராமல் ரூ.14 லட்சத்திற்கு காசோலை வழங்கியுள்ளார். அந்த காசோலையை முனியசாமி வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பி அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக முனியசாமி ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.-1 நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நடிகர் சீனிவாசன் ஆஜராகவில்லை. நீதிபதி நிலவேஸ்வரன் வழக்கு விசாரணையை வரும் ஜூன் 24க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us