/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
/
அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
ADDED : மே 10, 2024 04:42 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகேயுள்ள கலைபண்பாட்டு துறை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024-25 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
குரலிசை, நாதஸ்வரம்,தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12 முதல் 25 வயதிற்குள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி கட்டணம் ஆண்டிற்கு ரூ.350, விலையில்லா பாடபுத்தக்கம் வழங்கப்படும்.
மாதந்தோறும் ரூ.400 ஊக்கதொகை, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் மேலும் விபரங்களுக்கு நேரடியாகவும், 95664 73769, 94432 07376 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என முதல்வர் சரவண மாணிக்கம் தெரிவித்துள்ளார்.