/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதம் காயமடையும் பக்தர்கள்
/
அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதம் காயமடையும் பக்தர்கள்
அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதம் காயமடையும் பக்தர்கள்
அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதம் காயமடையும் பக்தர்கள்
ADDED : ஜூலை 09, 2024 07:14 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் இடறி விழுந்து காயமடைகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக மத்திய சுற்றுலா நிதியின் கீழ் 2020ல் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமென்ட் சிலாப்பில் படிக்கட்டுகள் அமைத்தனர்.
இவை ராட்சத அலையில் சேதமடைந்து விடும் என்று பணி துவக்கத்திலேயே ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் அமைத்த நிலையில் தற்போது ராட்சத அலையால் அனைத்து படிக்கட்டுகளும் சேதமடைந்துள்ளது.
இதன் வழியாக நீராடச் செல்லும் பக்தர்கள் இடறி விழுந்து காயமடைகின்றனர். இதனை அகற்றி இயற்கை சார்ந்த கடற்கரை உருவாக்குவதற்கு பக்தர்கள் வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.