ADDED : ஜூலை 22, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே பாரூர் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து 80. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரூர் பஸ்ஸ்டாப்பில் உள்ள கடையை நோக்கி நடந்து சென்றார்.
அப்போது டூவீலர் மோதியதில் அதே இடத்தில் காளிமுத்து பலியானார்.
திருவாடானை போலீசார் தேனி மாவட்டம் நீரார்பட்டியை சேர்ந்த நாகராஜ் 53, கைது செய்தனர்.