sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உத்தரகோசமங்கையில் ஆனித்திருமஞ்சனம் அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது

/

உத்தரகோசமங்கையில் ஆனித்திருமஞ்சனம் அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது

உத்தரகோசமங்கையில் ஆனித்திருமஞ்சனம் அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது

உத்தரகோசமங்கையில் ஆனித்திருமஞ்சனம் அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது


ADDED : ஜூலை 13, 2024 04:37 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்கள நாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஆனி திருமஞ்ன விழா நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது.

இங்கு ஆண்டிற்கு ஒருமுறை மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்றது. அன்றைய தினம் பச்சை மரகத நடராஜர் திருமேனியில் ஆண்டிற்கு ஒருமுறை சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடக்கும். இந்த அரிய நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

அடுத்து ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடக்கும் சிறப்பு அபிஷேகம் ஆனி திருமஞ்சனம் என அழைக்கப்படுகிறது.

உற்ஸவ மூர்த்திகளான நடராஜப் பெருமான் சமேத சிவகாமி அம்மன் மரகத நடராஜர் சன்னதி முன்பு மேடை அமைக்கப்பட்டு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகளும், தீப, துாப நெய்வேத்தியங்களும் படைக்கப்பட்டது.

இந்த பூஜை அதிகாலை 4:00 முதல் 6:00 மணி வரை நடந்தது. ஓதுவார் மூலம் திருவாசகம் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன. உள்பிரகார வீதி உலாவிற்கு பிறகு மங்களேஸ்வரி அம்மன் சன்னதியில் உற்ஸவமூர்த்திகள் கொண்டு செல்லப்பட்டனர்.

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.

கயிலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us