நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி அருகே தேவர்குறிச்சி கிராமத்தில் மகமாயி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. முதலாம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் விளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது.
காலையில் யாகசாலை பூஜை நடந்தது. மூலவர் மகமாயி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை தேவர் குறிச்சி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துஇருந்தனர்.

